திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை மற்றும் விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவரும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளருமான இன்ஜினியர் ராஜசேகர் தலைமையேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கியவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் வசந்த், கல்லூரியின் முதல்வர் மணிகண்டன், பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி மாவட்ட பட்டதாரிகளுக்கான பேரவை உறுப்பினர் ராதிகா, யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான முனைவர். குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வளர்மதி, திருச்சி ரத்த வங்கி ஆட்டுநர் பாலச்சந்தர் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 150 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்வை விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் ரம்மிகா மற்றும் கௌஷிக் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்கள்.