திருச்சியில் இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்த
வட மாநில வாலிபர் கைது.
திருச்சி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்.
இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28).
இந்த தம்பதியருக்கு இடையே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் சிவரஞ்சனி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வீட்டின் அருகே ஒரு வீடு கட்டுமான பணி நடைபெற்றது. அதில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அப்போது ஒரிசா மாநிலம் பூரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த மாதவ் சம்பந்தாராய் (வயது 26) என்பவருடன் சிவரஞ்சனிக்கு பழக்கம் ஏற்பட்டது.பின்னர் அவர்கள் சில ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் திடீரென மாதவ் சமந்தா ராய் சிவரஞ்சனியை தவிக்க விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்றார்.
அதன் பின் சிவரஞ்சனி உடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அந்த வட மாநில வாலிபர் திருச்சி கோட்டை அன்னதான சத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் சிவரஞ்சனி தனது தந்தையுடன் அந்த வாலிபரிடம் இப்படி என்னை ஏமாற்றிவிட்டு சென்று விட்டாயே. என்னை திருமணம் செய்து கொள் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மாதவ் மறுப்பு தெரிவித்தார்.பின் நடைபெற்ற வாக்குவாதத்தின் போது அந்த வட மாநில வாலிபர் சிவரஞ்சினியின் சேலையை இழுத்து அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக சிவரஞ்சனி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாதவ்ராயை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.