Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உடல்நிலை சரியில்லாத தொழிலாளி கட்டிலில் இருந்து தவறி விழுந்து சாவு.

0

'- Advertisement -

 

சிறுகனூர் அருகே உடல்நிலை சரியில்லாத தொழிலாளி
கட்டிலில் இருந்து தவறி விழுந்து சாவு.

Suresh

திருச்சி மண்ணச்சநல்லூர் பாளையூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 50) கூலி தொழிலாளி.இவர் சர்க்கரை மற்றும் உயரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டு கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்தார் இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து எதிர்பாராத விதமாக காமராஜ் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.

உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.