Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி, 2 சிறுமிகள் உட்பட 3 பேர் படுகாயம்.

0

'- Advertisement -

 

 

திருச்சி அருகே இன்று காலை சாலை விபத்தில்
இருசக்கர வாகனங்கள் மோதி 2 வாலிபர்கள் பலி.

2 சிறுமிகள் உட்பட மூன்று பேர் படுகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டியை அடுத்த பாதிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் காளிமுத்து (வயது 37).இவரது நண்பர் பழனியப்பன் (வயது 28) இருவரும் இன்று காலை திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் பகுதியில் கட்டிட வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தனர். இவர்கள் வந்த வாகனம் திருச்சி அருகே உள்ள மணிகண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நாகமங்கலம் அருகே உள்ள சீரா பள்ளி என்ற இடத்தில் அருகே வரும் பொழுது எதிரே நாகமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு வாலிபர் நேருக்கு நேராக எதிரே வந்த காளிமுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இந்த விபத்தில் காளிமுத்து மற்றும் பழனியப்பன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதே போன்று எதிரே மோதிய மற்றொரு வாகனத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 28)மற்றும் அவரது தங்கை மகள்கள் இரண்டு சிறுமிகள் பலத்த காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனைக்குசெல்லும் வழியில் காளிமுத்து பரிதாபமாக இறந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக இறந்தார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு சிறுமிகளும் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காளிமுத்து உடன் மோட்டார் சைக்கிளில் வந்த பழனியப்பன் கால் முறிவு ஏற்பட்ட தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பாலாஜி மோட்டார் சைக்கிளில் வந்த போது திடீரென்று டயர் வெடித்தது. இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துள்ளானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அருகே பட்டப்பகலில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் மணிகண்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.