
எம்ஜிஆர் 106 வது பிறந்த நாளையொட்டி
கங்காரு கருணை இல்லத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அன்னதானம்.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் 106-வது பிறந்த நாளை ஒட்டி கருமண்டபம் பகுதி அதிமுக சார்பில் டி.ஆர்.சுரேஷ் குமார் ஏற்பாட்டில் திருச்சி கிராப்பட்டியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சீனிவாசன்,

முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம்,பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருமண்டபம் பகுதி செயலாளர் கலைவாணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில்
மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர்கள் கிராப்பட்டி கமலஹாசன், பாலு மகேந்திரன், சிங்காரவேலன், கே.சி.பி ஆனந்த், வசந்தம் செல்வமணி, கணேஷ், பகுதி நிர்வாகிகள் கே.சி.மோகன், என்.பி.வெங்கடாசலம், ஐயப்பன், எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், மல்லிகா, காளிமுத்து. பாலசுப்பிரமணியன், தனிஸ்லாஸ் டேனியல், புத்தூர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

