திருச்சியில் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓபிஎஸ் முகமூடி அணிந்து மாலை அணிவித்த அதிமுகவினர்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பத்மநாதன்,
வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு ,நடராஜன் , பால்ராஜ், இளநீர் ராஜேந்திரன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர் அனைத்து நிர்வாகிகளும் ஓபிஎஸ் முகமூடி அணிந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

