10 ஆண்டுகளில் நிறைவேற்றக்கூட திட்டங்களை ஒன்றை ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளது திமுக அரசு.திருச்சியில் அமைச்சர் சாமிநாதன்.
10 ஆண்டுகளில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளது திமுக அரசு.
அரசுப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சு
தேர்தல் வாக்குறுதிகளை அரசு படிப்படியாக நிறைவேற்றுவதுடன் 10 ஆண்டுகளில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது இந்த அரசு என்று தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.
அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருச்சியில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டு நேற்று முதல் தொடங்கப்பட்டது. பொருட்காட்சியை தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று இரவு தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, 96 பேருக்கு ரூ. 2.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
நிகழ்வில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மேலும் பேசுகையில், தமிழக அரசின்
5ஆவது பொருட்காட்சி திருச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு திட்டங்களை மக்கள் நேரடியாக அறிந்து, எந்தந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்ற விவரங்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசு பொருட்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சி வரும் பிப்.27 ஆம் தேதி வரை 45 நாட்கள் மாலை 4 முதல் இரவு 9 வரை நடைபெறும்.
இந்த அரசு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் அதையும் தாண்டி அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக இலவச பேருந்து வசதி, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்டவைகளை கூறலாம். அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 26 அரசுத்துறை, 8 சார்புத்துறை உள்ளிட்ட 34 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.