பள்ளி மாணவர் உட்பட இரண்டு பேர் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி பலி.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 17 )அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் இன்று காலை திருச்சி வாசன் நகரில் வசித்து வரும் தனது மாமா சண்முகம் வீட்டிற்கு வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து உய்யகொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்றின் ஆழமான பகுதியில் குளித்த போது
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்