திருச்சி சிங்காரத்தோப்பு அருகே பூம்புகார் ஷோரூம் எதிரில் உலகத்தரம் வாய்ந்த நவீன காவல் கட்டுப்பாட்டு கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த பூமி பூஜையை திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிக்கோ இதயராஜ் தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்,
கோட்டத் தலைவர்கள் மதிவாணன், ஜெயா நிர்மலா மற்றும் பகுதி செயலாளர் மோகன், புஷ்பராஜ்,தன்ராஜ்,ஜான் பிரகாஷ், ஞானபிரகாசம்,திமுக வட்ட செயலாளர்கள், காரைக்குடி கல்ஃப இன்ஜினியரிங் குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

