Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக அயற்பணி பேராசிரியர்களின் மாநிலம் தழுவிய கோரிக்கை விவாத மாநாடு.

0

அண்ணாமலை பல்கலைக்கழக அயற்பணி பேராசிரியர்களின் மாநிலம் தழுவிய கோரிக்கை விவாத மாநாடு அண்ணாமலை ஒருங்கிணைந்த அயற்பணி
பேராசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கதலைவர் முனைவர் ரொனால்ட்ரோஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்க துணைத்தலைவர்கள் பிராபாகரன், சரவணன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் தமிழக அரசுக்கு ஷிவ்தாஸ் மீனா
(தனிநபர் ஆணைக்குழு) பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அயற்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே பணிவரன்முறை செய்தல் என்ற ஒற்றை கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக பொதுச்செயலாளர் முனைவர்.
அழகப்பன்காந்தி வரவேற்றார். முடிவில் பொருளாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.