திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் கல்லணை ரோடு பகுதியில் உள்ள காவிரி கரையில் திருவானைக் கோவில் பகுதி திமுக சார்பில் மாபெரும் குதிரை பந்தயம் இன்று காலை நடைபெற்றது.
தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கர் துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என் நேரு வின் 70 வது பிறந்த தின விழாவினை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் கல்லணை ரோட்டில் உள்ள தங்கையன் கோயில் முன்பு தொடங்கியது.
இந்த குதிரை பந்தயம் திருவளர்ச்சோலை வழியாக உத்தமர் சீலி வரை சென்று மீண்டும் குதிரை பந்தயம் துவங்கிய தங்கையன் கோவிலில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் பெரிய குதிரை 10 மைல் தூரத்திற்கும், கரிச்சான் குதிரை 8 மைல் தூரத்திற்கும், புதிய குதிரை 6 மைல் தூரத்திற்கும் கணக்கிடப்பட்டு குதிரை பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் வெற்றி பெற்ற பெரிய குதிரைக்கு முதல் பரிசாக ரூபாய் 20,070 ம், கரிச்சான் குதிரைக்கு முதல் பரிசாக ரூபாய் 15 ,070 ம், புதிய குதிரைக்கு முதல் பரிசாக ரூபாய் 10,070 என்ற விதத்தில் மூன்று வகையான குதிரைகளுக்கு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பந்தயத்தில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது சேலம்,கரூர் ,ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட குதிரைகள் இப்போட்டியில் பங்கேற்றது.
ரேக்ளா ரேசை முன்னிட்டு கல்லணை சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.