திருச்சியில் கானாமல் போன
லாரி குமரியில் மீட்பு.
திருச்சியில் திருடுபோன லாரியை போலீஸôர் கன்னியாகுமரியில் வைத்து மீட்டதுடன் தொடர்புடைய இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவேரி நகரை சேர்ந்தவர் அ. கிருபை நாயகம் (வயது25). இவருக்கு சொந்தமான ஜீப்புடன் கூடிய டிரெய்லர் லாரியை தனிஸ்லாஸ் என்பவர் ஓட்டி வந்தார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி,துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகே லாரியை நிறுத்தியிருந்தார். 21ஆம் தேதி சென்று பார்த்தபோது லாரியை காணவில்லை. இது தொடர்பாக கிருபை நாயகம் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் துணைக்கண்காணிப்பாளர் ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கிருபை நாயகத்தின் உறவினரான, நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செ. ஜோஸ்வா (வயது 32) மற்றும் அவரது நண்பரான திருத்துறைப்பூண்டி, நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ச.ராஜா(41) ஆகிய இருவரும் லாரியை திருடி, அதன் பதிவு எண்ணை மாற்றி, கன்னியாகுமரியில் கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இருவரையும் (நேற்று) வெள்ளிக்கிழமை கைது செய்து, லாரியை மீட்டுள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட துவாக்குடி காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் கமலவேணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் சதிஸ்குமார், இன்பமணி, காவலர்கள் அருண்மொழிவர்மன், ராஜேஸ் கொண்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.