Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்.

0

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி (தியாகி அருணாச்சலத்தின் பேத்தி). இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஏபிசி மண்டேசரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது.

இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தனது நண்பரின் உறவினரான அத்தினா சூர்யா என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது.

எனவே ஆர்த்தி அத்தினா சூர்யாவிடம் உரிமம் முடிந்த நிலையில் கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் 6 மாத வாடகையும் தராமல் இருந்து உள்ளனர்.

அத்தினா சூர்யாவின் கணவர் சூர்யா சிவா பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் பொறுப்பு வகிப்பதால், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறியதோடு அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

அதோடு சூரியா சிவா ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரிக்க நினைப்பதோடு அவற்றை தன்னுடைய பெயருக்கு ஐந்து வருடத்திற்க்கு எழுதி தர வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

இதனால் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி ஆர்த்தி இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சூரியா சிவாஅவரது மனைவி மீது புகார் மனு அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.