தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு வாழ்த்து.
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுப்பெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினருக்கு வாழ்த்து:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகரக் கிளை உறுப்பினரும்,
பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான து. இராஜராஜேஸ்வரி அவர்கள்
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெற்றமைக்கு
திருச்சி நகரக் கிளை சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இவ்வினிய நிகழ்வில்
மாநில பொருளாளர் சே.நீலகண்டன்,மாநகரச் செயலாளர் அமல் சேசுராஜ்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்
சிராஜுதீன்
மாவட்ட துணைச் செயலாளர் பெர்ஜித் ராஜன்,
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தன்,நிசார் அகமது,
நகர துணைச் செயலாளர் ராக்லண்ட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.