Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அந்தோ பரிதாபம், லால்குடி-வாளாடி மேம்பாலத்தின் நிலை குறித்து மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் அறிக்கை.

0

 

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:-

அந்தோ பரிதாபம் லால்குடி-வாளாடி மேம்பாலம்.

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாளாடி பகுதியில் இரயில்வே மேம்பாலம் உள்ளது. மேற்படி மேம்பாலத்தை நெடுஞ்சாலை துறை முறையாக பராமரிக்க படாததால் மேற்படி மேம்பாலத்தின் இரு பகுதிகளிலும் அதிக அளவில் மண்கள் மண்டி அதில் செடி வளர்ந்து காணப்படுகிறது. மேலும் தற்பொழுது தமிழகத்தில் ஆடி மாதம் நெருங்கி வருவதால் அதீத காற்றின் காரணமாகவும், மேற்படி மேம்பால ஒரத்தில் நிறைந்துள்ள மண்களை அகற்றாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் விபத்து ஏற்படவாய்ப்புள்ளது.

மேலும் மேற்படி மேம்பாலம் முறையாக பராமரிக்க படாததால் மேற்படி மேம்பால பயணம் மிகவும் சிரமம் நிறைந்த பயணமாக உள்ளது.

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகவும் மேற்படி லால்குடி-வாளாடி மேம்பாலத்தின் இரு புறங்களிலும் நிறைந்துள்ள மண் மற்றும் செடிகளை சுத்தம் செய்வதுன், மேற்படி மேம்பாலத்தை வாகனங்கள் செல்ல ஏதுவாக சீரமைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.

என திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர்
வக்கீல்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.