தமிழக முதல்வர் மாம்பழச்சாலை காவிரி மேம்பாலத்தை ஆய்வு செய்ய மநீம மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் கோரிக்கை.
திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மாம்பழச்சாலை காவிரி மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.
கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் திருச்சி மாநகரின் பிரதான பகுதிகளை இணைக்கும் சிந்தாமணி – மாம்பழச்சாலை காவிரி மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் காவிரி மேம்பாலத்தை சீரமைக்கிறேன் என்ற பெயரில் செங்கற்களால் காவிரி பாலத்தின் கைப்பிடி சுவர்களை கட்டியதுடன், பாலத்தின் சிரதன்மையையே கேள்வி குறியிக்கும் வகையில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இது அப்பொழுதைய காலத்தில் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் சீரமைப்பதற்கு முன்பாக நன்றாக இருந்த காவிரி மேம்பாலம் சீரமைப்பிறகு பிறகு பயணிக்க முடியாத அளவிற்கு உருக்குலைந்து விட்டது. மேலும் தற்பொழுதைய திராவிட முன்னேற்ற கழக உள்ளாட்சித்துறை அமைச்சர் காவிரி மேம்பாலத்தை ஆய்வு செய்து காவிரி மேம்பாலத்தை சீரமைப்பதோடு அதன் அருகிலே புதிதாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் மேற்படி மேம்பாலத்தில் முறையாக சீரமைக்கப்படாததால் மேற்படி காவிரி மேம்பாலத்தில் பயணம் செய்யும் *பயணிகளின் கண்ணீர்* அந்த காவிரிஆற்றிலே கலந்துவிடுவது கூடுதல் சோகம்.
எனவே திருச்சி மாநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்கள் திருச்சி மாநகர மக்கள் தினம், தினம் அனுபவிக்கும் காவிரி மேம்பால துன்ப பயணத்தை நேரில் ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.