திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்
அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஓர் டீக்கடை அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார் .
அவர் மயங்கி விழுந்து இறந்தார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன்ராஜ் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.