திருச்சி மத்திய சிறை
பெண் காவலரின் கணவர் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் மத்திய சிறைச்சாலை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வினா ( வயது 40 ).கிரேடு – 1 வார்டன். இவரது கணவர் செந்தில்குமார். (வயது 41). இவர் டெலிவரி மேனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் குடியிருப்பில் திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.