திருவரங்கத்தில்
லாட்டரி விற்றவர் கைது.
திருவரங்கம் சிங்கர் கோவில் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரமேஷ் கைது செய்யப்பட்டார்