தனியார் பள்ளி ஆசிரியை தீடீர் சாவு.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் அண்ணாமலை இவரது மனைவி ராதிகா (வயது 42) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.