திருச்சியில் சசிகலா பேட்டி:-
சசிகலா கடந்த மார்ச் 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி அன்று முதற்கட்ட ஆன்மீக பயணத்தை தஞ்சையில் தொடங்கினார். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆன்மீக சுற்றுப்பயணத்தை திருச்சியில் துவங்கினார்.
மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த சசிகலாவிடம் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று சசிகலா பதில் கூறினார். மேலும் உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?’ என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்லமல்
தற்போது கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து பின்னர் பதிலளிக்கிறேன்” என்று கூறி காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
திருச்சி வந்த சசிகலாவை வரவேற்க திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தகடை செந்தில் மற்றும் ஏராளமான சின்னம்மா விசுவாசிகள் சென்றிருந்தனர்.