Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது இரு சக்கர வாகனம் மோதி பலி.

0

திருச்சி திருவளர்சோலையில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி.
போலீசார் விசாரணை.

திருச்சி திருவளர்சோலை பொன்னுரங்கபுரத்தில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். இவர் அவ்வழியாக நடந்து சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

இதுகுறித்து திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி கண்ணதாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.