Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேங்காய் தண்ணீரின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம்.

0

 

தேங்காய் தண்ணீரின் மருத்துவம்.

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

இளநீரின் நன்மைகளைப்
பற்றி அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும்
பலரும் அறிந்திருப்பீர்கள்.

இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,

தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.

அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் பார்க்க உள்ளோம்.

தேங்காய் தண்ணீரின் முக்கியமான மூலப்பொருள், அதன் மொத்தத் தண்ணீர் ஆகும்.

ஆயினும் தேங்காய் தண்ணீர், வைட்டமின் சி மற்றும் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு தாதுக்களையும் கொண்டிருக்கிறது.

யு.எஸ்.டி.ஏ, ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி,
100 மி.லி தேங்காய் தண்ணீர், பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கிறது:

ஊட்டச்சத்து 100 கிராமில்
உள்ள அளவு.

ஆற்றல்.
29 கி.கலோரி,

புரதம்..0.30 கி,

கார்போஹைட்ரேட்டுகள் 6.97 கி,

சர்க்கரை.
6.36 கி,
தாதுக்கள்
சுண்ணாம்புச்சத்து. 6 மி.கி
மெக்னீஷியம்
2 மி.கி,
பாஸ்பரஸ். 6 மி.கி,

பொட்டாசியம். 176 மி.கி,

சோடியம். 12 மி.கி,

வைட்டமின்கள்
வைட்டமின் சி
5.5 மி.கி,

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை
7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.

ரத்த பிளாஸ்மா என்பது நமது ரத்தத்தின் ஒரு அங்கம்.

ஆனால் இந்த ரத்த பிளாஸ்மாவை போன்றே தேங்காய் தண்ணீரின் குணநலன் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவசர காலங்களில் உயிரிழப்பை தவிர்க்க ரத்த பிளாஸ்மாவிற்கு பதிலாக தேங்காய் தண்ணீரை உபயோகிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரி,இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

1.நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன்
மூலம் நோயெதிர்பபு
மண்டலம் வலிமைப் பெறுவதோடு,
சிறுநீர் பாதை தொற்றுகள்,
ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

2.தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்

3.சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர்
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு,
சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.

4.செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.

ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து
வளமாக நிறைந்துள்ளது.

இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

5.எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை
எவ்வளவு குடித்தாலும்,
உடலில் கொழுப்புக்கள்
சேராது.

மேலும் இதை குடித்தால், பசி கட்டுப்படும்.

இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

6.உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

7.இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

8.நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

9. கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் பல நன்மைகளை தரக்கூடிய தேங்காய் தண்ணீரை நாமும் பருகுவோம்.

Leave A Reply

Your email address will not be published.