Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பர்மிட் இல்லாமல் வந்த குஜராத் சுற்றுலா பஸ். திருச்சி ஆர்.டி.ஓ. அதிகாரிகள் ரூ.40,500 அபராதம் விதிப்பு.

0

‘ பர்மிட் ’ இல்லா குஜராத் பஸ் திருச்சியில் பறிமுதல் .

குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்றது.

நேற்று இரவு , திருச்சி பிராட்டியூர் அருகே வந்தபோது , அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் , பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர் . அப்போது , பஸ்சுக்கு உரிய பர்மிட் இல்லாமல் வந்தது தெரிய வந்தது .

இதைத் தொடர்ந்து , அதிகாரிகள் உரிய அபராதம் செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினார். ஆனால் , பஸ்சில் வந்தவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டனர் .

இதனால் , அதிகாரிகள் பஸ்சை விடுவிக்காமல் , பெண் பயணிகள் உட்பட 41 பேருடன் இரவு முழுவதும் பிராட்டியூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.

இன்று காலை 11 மணி அளவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் மூலம் பணத்தைப் பெற்று நுழைவு வரி 40 ஆயிரத்து 500 ஆர்டிஓ அலுவலகத்தில் அபராதமாக கட்டி பஸ்ஸை பெற்று ராமேஸ்வரம் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.