திருச்சி மாநகராட்சி 34வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டனர்.
இதில் திருச்சி மாநகராட்சி கீழப்புதூர், மணல்வாரி துறைரோடு, துரைசாமிபுரம்,பாரதி நகரில் குறிப்பிட்ட சில தெருக்கள். மேல கிருஷ்ணன் கோயில் தெரு, கீழ கிருஷ்ணன் கோயில் தெரு,அம்மன் கோயில் தெரு, உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய
ஆகிய 34வது வார்டில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஜெ.சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் திருச்சி மாநகராட்சி துணை மேயராகவும், அரியமங்கலம் கோட்ட தலைவராகவும் சிறப்பாக மக்கள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.