Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியார் கல்லூரியில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி.தனியார் கல்லூரி பொலிவு பெற அரசு பணமா ? வழக்கறிஞர் கிஷோர்குமார்.

0

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின்  மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

 

“தமிழக அரசின் விழாக்கள்,தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் நடைபெறுவதை அரசு உறுதி செய்யவேண்டும்…!”

தமிழக முதல்வர் வரும் 30ந் தேதி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டபணிகளை தொடங்கிவைக்க வருகைபுரிகிறார். திருச்சிக்கு வருகைதரும் தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்கிறோம்.

ஆனால் அதே வேலையில் கடந்த ஆட்சி காலத்து ஆட்சியாளர்கள், தங்களை பிரமோட் செய்ய அரசு பணத்தை வாரி
இறைத்து சுயவிளம்பரம் தேடினர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற தமிழக முதல்வர் தனது ஒவ்வொரு விழாவையும் ஆடம்பரத்தை தவிர்த்து வருகிறார். இதனை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என்பது அனைத்து பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் வரும் 30ந் தேதி திருச்சி வருகை தரும் தமிழக முதல்வரின் விழா திருச்சி கேர் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது.
(இந்த தனியார் கல்லூரி பொழிவு பெற அரசு பணமா?)

மேற்படி விழாவிற்காக பிரமாண்ட மேடை உள்ளிட்டவை அரசு பணத்தில் செலவு செய்வது தான் ஏற்புடையதாக இல்லை. மேலும் தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் நிதிநிலை அதலபாதாளத்தில் உள்ளது என்பது களஎதார்த்தம்.

மேலும் திருச்சியில் இதற்கு முன்பு இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த மதிப்புமிகு டாக்டர். அப்துல்கலாம் இருந்த பொழுதும் தனியார் கல்லூரிகளில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள்யாவும் மேற்படி நிகழ்ச்சி நடத்த போதுமான மேடை, நாற்காலிகள், மின் இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் ஒரு அரசு விழா நடத்த திருச்சியில் அரசு கட்டுப்பாட்டில் ஒரு இடம் கூடவா இல்லை….?

எனவே தமிழக அரசு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தமிழக அரசு விழாக்களையும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் இவ்வாறான விழாக்களினால் தேவையில்லாத அரசின் செலவினங்களை குறைப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

நன்றி. நாளை நமதே.
என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர்
வக்கீல்.S.R.கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.