Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டூவீலர் மீதுகார் மோதி வயதான தம்பதியினர் இடத்திலேயே பலி.சமயபுரம் அருகே பரிதாபம்.

0

சமயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் வயதான தம்பதி சம்பவ இடத்திலேயே பலி.

திருச்சி லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியயநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயியான ஜோசப் (வயது 65). இவரது மனைவி ஆர்க்னஸ்மேரி (வயது60).

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வந்தலைக்கூடலூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜோசப் மற்றும் அவரது மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் சமயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.N

திருச்சி, சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக வந்து பணமங்கலம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்தி தப்பிச் சென்ற கார் ஓட்டுனர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.