Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்று பேராயர் ஜான் ராஜ்குமார் அறிக்கை.

0

 

திருச்சி மாநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்று பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் அறிக்கை.

திருச்சி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐசிப் பேராயம் சார்பில் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் வரவேற்பு.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நல திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஐசிஎப் பேராயம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்

இன்றைய தினம் திருச்சி மாநகரில் வருகைதந்து பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தங்களுக்கு வாழ்வா தாரத்தை ஏற்படுத்தும் வண்ணமாக ஆடு, மாடுகள் மற்றும் சுயதொழில் தொடங்க பண உதவி, முதலீடு போன்றவை அளித்து

சிறப்பாக இன்றைக்கு திருச்சி மாநகருக்கு வருகை தருகின்ற தமிழக முதலமைச்சர் அவர்களை எங்கள்

எங்கள் கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் வருக வருக என்று வரவேற்கிறோம்.

அதுமட்டுமல்ல சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் சார்பில் தங்களுடைய வருகைக்கு எங்களது வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக சிறுபான்மை மக்கள் நலனுக்காகவே இயங்கக்கூடிய இந்த தமிழக அரசு குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

அதுபோலவே சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்கவும், அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

தொடர்ந்து உங்களுடைய நல்லாட்சி தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம் நன்றி வணக்கம்.

என திருச்சி ஐசிஎப் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.