Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.

0

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் ,ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் , குழுமமும் இணைந்து வயது 12 ,14,16,18 & 20க்கும் கீழ் ஆகிய பிரிவுகளில் சீறும் சிறப்புமாக நேற்றும் இன்றும் இருபாலருக்குமான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா செயற்கை ஒடுதள விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நேற்று காலை 9.00 மணிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ தலைமையிலும் ,

திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், இணைச் செயலாளர் சுதமதி ரவிசங்கர் ,ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, உதவிச்செயலாளர் கனகராஜ், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன், கே.சி. நீலமேகம், ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

ஆப்பிள் பில்லட் வீரசக்தி , நியூரோ ஒன் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.விஜயகுமார் , திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே.பிரபு, ஸ்டேட் பேங்க் எஸ்.மோகன் நினைவு சுழற்கோப்பை குழுமம் தலைவர் எம்.கிரிஷ் பிகோவன் , ஸ்வர்கதிவ்யதர்ஷினி ,

அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
போட்டிய துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இன்று திங்கள்கிழமை இரண்டாம் நாள் போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழாவிற்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையிலும் , தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர் , ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, மக்கள் தொடர்பு கே.சி. நீலமேகம் , கனகராஜ் , சங்கர், ஆகியோர் முன்னிலை நடந்தது.

தடகள இணைச் செயலாளர் முனைவர் சுதமதி ரவிசங்கர் வரவேற்புரை ஆற்றினார்.

ஆப்பிள் மில்லட் வீர சக்தி, நியூரோ ஒன் மருத்துவமனை டாக்டர் எஸ்.விஜயகுமார்,
TSP 1 BN commandant of Police எம். ஆனந்தன் , மாநில வலைபந்து கழக செயலாளர் ராஜ்திரு, ஆகியோர் வெற்றி பெற்றவருக்கு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

ஒட்டு மொத்த குழு ஆண்கள் பிரிவின் பதக்கங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் பெற்றது.

முடிவில் தடகள சங்க நிர்வாகி சத்தியமுர்த்தி நன்றியுரை ஆற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.