திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பிற்கு திரும்புவோம் நிகழ்ச்சி.
திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பிற்கு திரும்புவோம் நிகழ்ச்சி.
ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்
“வகுப்பிற்குத் திரும்புவோம்” என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் பெரும் தொற்று காலத்திற்குப் பிறகு செப்டம்பர் மாதத்திலிருந்து 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கும் நவம்பர் முதல் வாரத்திலிருந்து ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கும் வகுப்புகள் நடைபெற பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
படிப்படியாக பள்ளிகள் திறந்த போதும் அந்தந்த வகுப்பு மாணவர்களுக்குப் புத்தாக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன
ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நேரடியாக பாடங்கள் தொடங்கப்படாமல் அவர்களுக்கு மனம் மகிழும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது
அதன்படி மாணவ மாணவிகள் மனம் மகிழும் வண்ணம் “வகுப்பிற்குத் திரும்புவோம்” என்ற நிகழ்ச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா சற்குணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவை மகா மேஜிக் நிறுவனர் மகா பல்வேறு மேஜிக்குகளைச் செய்து காண்பித்து மாணவ மாணவிகளை அசத்தினர்
மனம் விட்டு சிரித்து மகிழ்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் காட்சியானது
வெகு நாட்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் வகுப்பிற்குத் திரும்புவதை உணர்த்தியது.
நிகழ்ச்சியினை திருச்சி பெல் நண்பர்கள் குழு நாகராஜ் அவர்கள் செய்திருந்தார்.