தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்கள் ஆணைக்கிணங்க
தஞ்சையில் 7 அமைச்சர்கள் ஆய்வு.
மழையினால் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது
இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன் சக்கரபாணி ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .
இக்குழுவினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் மழை பெய்த அளவு பயிர் பாதிப்பு குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
பிறகு விவசாயிகள் சங்க நிர்வாகிகள். விவசாயிகளுடன் அமைச்சர்கள் குழு கலந்துரையாடியது
தஞ்சையில் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பகுதியில் மழையால் பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களிலும் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது.