திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ராஜசேகரன் தேர்வு.
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ராஜசேகரன் தேர்வு.
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் ராஜசேகரன் ஆவார்.
தற்போது மாநில தலைவர் அண்ணாமலை எஸ்.ராஜசேகரன் அவர்களை மாவட்டத் தலைவராக அறிவித்து உள்ளார்.
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா சிலர் கூறும்போது:
ராஜசேகரன் பாலக்கரை மண்டல் தலைவராக பணியாற்றிய போதே பொதுமக்களின் குறைகளை தானே முன்நின்று தீர்த்து வைப்பாவர்.
பொது மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.
மாற்றுக் கட்சியில் இருந்து பலரையும் பாஜகவில் இணைந்துள்ளார்.
இளைஞரான இவர் துடிப்பு மிக்கவர். கட்சிப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.திருச்சி மாநகர் பாரதிய ஜனதாக் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபடுவார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலரும் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ சேகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி புறநகர் அஞ்சாநெஞ்சன்,கரூர் செந்தில்நாதன், பெரம்பலூர் செல்வராஜ், விழுப்புரம் ராஜேந்திரன், செங்கல்பட்டு வேதா சுப்ரமணியம், கோயம்புத்தூர் வடக்கு சங்கீதா, ஆகியோர் புதிய மாவட்ட தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட மேற்பார்வையாளர்கயாக திருச்சி மாநகர் லோகிதாஸ்,ராமநாதபுரம் நாகேந்திரன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.