Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்.தமிழக அணிக்கு 4-வது வெற்றி .

0

13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோ, டெல்லி, கவுகாத்தி, வதோதரா உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன

. இதன் ‘எலைட் ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் தமிழக அணி லக்னோவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குர்கீரத் சிங் ஆட்டம் இழக்காமல் 43 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 34 ரன்னும் சேர்த்தனர். பின்னர் ஆடிய தமிழக அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார்.

லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் மராட்டியம், தமிழ்நாடு அணிகள் தலா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ‘ரன்-ரேட்’ முன்னிலை அடிப்படையில் மராட்டிய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. தமிழக அணி கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.