Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் இந்திய அணி அறிவிப்பு. ஐபிலில் அதிக ரன், விக்கெட் எடுத்த வீரர்கள் தேர்வு.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் இந்திய அணி அறிவிப்பு. ஐபிலில் அதிக ரன், விக்கெட் எடுத்த வீரர்கள் தேர்வு.

0

நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 14 ஆம் தேதி 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைய உள்ள நிலையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வரும் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 19 ஆம் தேதி ராஞ்சியிலும் கடைசி போட்டி 21 ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகமது. சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி அதிக ரன்கள் அடித்த ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஆர்சிபி அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.