புதிய வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்களில் அதிமுக நிர்வாகிகள் முனைப்போடு செயல்படவேண்டும்.மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
புதிய வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்களில் அதிமுக நிர்வாகிகள் முனைப்போடு செயல்படவேண்டும்.மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி அறிக்கை.
புதிய வாக்காளர் சேர்த்தல் முகாம்:
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அறிக்கை:
நவம்பர் 1 முதல் 30ம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்களை நீக்கவும், திருத்தங்கள் செய்யவும் தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது.
மேலும் 13,14, 27,28 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த படுகிறது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.