Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புஸ்வானம் விடும் நூதன உண்ணாவிரதப் போராட்டம்.

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புஸ்வானம் விடும் நூதன உண்ணாவிரதப் போராட்டம்.

0

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகளின் கோரிக்கைகள் புஷ்வானமானதால் புஷ்வானம் விடும் நூதன உண்ணாவிரதம் (05.11.2021 இன்று 25ம் நாள்) நடைபெற்றது.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க

மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் விவசாயிகள் திருச்சியில் திருச்சி to கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து 25ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக கூறிவிட்டு, மோடி ஐயா தராமல் விவசாயிகளின் கோரிக்கைகளை புஷ்வானமாக்கிவிட்டார் என்பதை சுட்டிக்காட்டி புஷ்வானம் (வானம்வெடி) விடும் நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்.

அய்யாகண்ணு அவர்களுடன் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகள் விபரம்:

அய்யாக்கண்ணு
மாநில தலைவர்,
மாநில துணை தலைவர் மேகராஜன்,

3.பெரியசாமி – தெற்கு சிறுப்பதூர், திருச்சி.
3. சுபையா – கோலார்பட்டி, திருச்சி.
4. மண்டையோடு ராஜேந்திரன் – சிந்தாமணி, திருச்சி.
5. நாச்சம்மாள் – துவரங்குறிச்சி, திருச்சி.
6.பாஸ்ட்டின் கென்னடி – அரியமங்கலம், திருச்சி.
7. மனோகரன் – மாநில செயலாளர், கக்கரை, தஞ்சாவூர்.
8. மாதா – கோவில்எசனை, அரியலூர்.
9. உமாராணி – கோவில்எசனை, அரியலூர்.
10. அப்பாவு – விட்டமாப்பட்டி, திருச்சி.
11. மணிவேல்ராஜ் – பாறைப்பட்டி, திருச்சி.
12. சகாயராஜ் – பாகனூர், திருச்சி.
13. குணசேகர் – ஈச்சம்பட்டி, திருச்சி.
14. பெருமாள் – வாழையூர், திருச்சி.
15. செல்வம் – ஒக்கநாடு, தஞ்சாவூர்.
16. ராஜேந்திரன் – ஒக்கநாடு, தஞ்சாவூர்.
17. முருகானந்தம் – கக்கரை, தஞ்சாவூர்.
17. தெய்வானை – ஒட்டக்குடி, திருச்சி.
18. கிருஷ்ணன் – மாவட்ட செயலாளர், கரூர்.

எஸ்.பிரேம்குமார் மாநில செய்தி தொடர்பாளர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.