Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

0

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

* நெல்லையில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது இந்த தகவலை கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

* கனமழை எச்சரிக்கையால் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (சனிக் கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதேபோல புதுச்சேரியில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்காலில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.