காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் கொலை சம்பவம. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் அறிக்கை.
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் கொலை சம்பவம. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் அறிக்கை.
காஞ்சிபுரத்தில் டாஸ்மார்க் பணியாளர் கொலை சம்பவம் குறித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
அன்பார்ந்த டாஸ்மாக் தோழர்களே அனைவருக்கும் தெரிவிப்பது
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் விற்பனையாளர் துளசிதாஸ் இறப்பையொட்டி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்களின் சார்பில் முற்றுகை நடத்தப்பட்டது .
இதில் மேலாண்மை இயக்குநர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் அவர் இறப்பு குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முழுமையான தகவல் குறித்து அவகாசம் தேவைப்படுவதாகவும், நிவாரணம் குறித்து துறை அமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிட செய்ய முழு முயற்சி எடுப்பதாகவும்,
மற்றொரு பணியாளர் ராமுவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இறந்த பணியாளரின் வாரிசுக்கு பணி வழங்கவும், அவரது குழந்தைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கல்வி செலவை ஏற்க வேண்டும் எனவும், பாதுகாப்பற்ற கடைகளுக்கு காவல்துறை மூலம் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவைகளை விரைந்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அதன்பேரில் நிர்வாகத்திற்கு சற்று அவகாசம் அளிப்பது எனவும், கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் அடுத்தகட்டமாக வருகின்ற 8-10-21 அன்று அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி அடுத்தகட்ட முடிவு எடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்,
தகவலுக்காக.
அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில்
தமிழ் நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்.