Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என்.ஜ.டியில் புதிய ஓபல் மகளிர் விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம் திறப்பு விழா.

0

'- Advertisement -

தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியில் (என்.ஐ.டி ) புதிய ஓபல் மகளிர் விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம் திறப்பு விழாவில்,

என்.ஐ.டி திருச்சி இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள், வளாகத்தில் அதிகரித்து வரும் பாலினப் பன்முகத் தன்மை குறித்து ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார்.

கழகம் நிறைய மாணவிகளை எதிர்ப்பார்க்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது என்பதற்கு 31.4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய விடுதி ஒர் அடையாளமாக உள்ளது என்று கூறிய அவர்,

இந்த வசதிகள் சுத்தமான, ஒழுங்கான மற்றும் பாதுகாப்பான வாழும் சூழலை முன்னிறுத்துகின்றன என்றார்.

Suresh

மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம் குறித்துப் பேசுகையில், 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இம்மையம் பல்துறை சார் சிறப்பு மையமாகத் திகழ்ந்து, ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஆய்வு செய்து புதிய பொருட்கள் மற்றும் செயல்முறைகளைக் கண்டறிவதற்கு அடித்தளமாக அமையும் என்றார்.

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, விடுதி மற்றும் சிறப்பு மையத்தின் வசதிகள் குறித்த ஒத்திகைக்
காணொளி திரையிடப்பட்டது.

பெண்களுக்கான தொழில்நுட்பக் கல்வியை
ஊக்குவிக்க கழகம் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளைப் பாராட்டிய அமைச்சர்,

இவை பெண்களை மட்டுமன்றி நாட்டையே வலிமைப்படுத்தும் எனக் கூறினார்.

என்.ஐ.டி திருச்சியின், நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட், இந்தத் திட்டங்களின் தேசிய முக்கியத்துவத்தையும், இவை புதிய கல்விக்கொள்கை 2020 – யுடன் ஒத்திருப்பதையும் குறித்துப் பேசினார்.

அதோடு கழகத்தின் தொடர்ச்சியான சாதனைகளுக்காக நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உழைப்பினை வாழ்த்தினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.