கொரோனா 2-வது அலையால் தற்போது வரை பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றது.
இந்தநிலையில் திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரியான பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திர மோகன் மீது கல்லூரி மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்து வந்த சில மாணவிகள் 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரியின் முதல்வருக்கு அனுப்பியிருக்கின்றனர்.
அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது; பேராசிரியர் வகுப்பறையில் தங்களுக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு இரட்டை அர்த்தில் கொச்சையாக பேசுவது, சில்மிஷம் என பல்வேறு பாலியல் சீண்டல்கள் ஈடுபட்டார்’ என்றும் உச்சகட்டமாக `சட்டையை பேண்ட்டை தளர்த்திக்கொண்டு அவர் செய்த சேட்டைகளை பார்த்து தலையை குனிந்துகொண்டே நாங்கள் வகுப்பறையில் இருந்தோம்’ என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் என்றால் தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப் படுத்துவதும், அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நளினி மாணவிகளைப்பார்த்து `எச்ஓடியை பார்க்க போகும் நேரத்தில் முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்’ என வலியுறுத்தியதாகவும்,
இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் புகார் கொடுத்திருக்கின்றனர்.
இந்தப்புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான, கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், கம்ப்யூட்டர் துறை தலைவர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய குழு புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையையும் கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்திருக்கும் நிலையில் தற்போது மாணவிகளின் புகார் குறித்து காவல்துறை வட்டாரமும் மறை விசாரிக்கத் துவங்கியிருக்கின்றது.
தமிழகத்தின் முக்கியமான கிருஸ்தவ கல்லூரி மட்டுமல்லாது பல்வேறு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கிய பிஷப் ஹீபர் கல்லூரியில் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனை எழுந்திருப்பது திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ்த்துறை மாணவிகள் கொடுத்திருக்கும் புகாருக்கு ஆளான அத்துறையின் தலைவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கல்லூரி பேராயர் சந்திரசேகரன் புகாரின் அடிப்படையில் (உண்மை இருப்பதால்) பேராசிரியர் சந்திரமோகனை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த குழு கல்லூரி கல்வி இயக்குனரக அலுவலகத்தில் என்ன அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் தெரியவில்லை, ஆனால் மூன்றாவது முறையாக பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாகம் பால் சந்திரமோகனை சஸ்பெண்ட் செய்துள்ளது.
மாணவிகள் புகார் குறித்து கல்லூரியில் நிர்வாகிகளை சந்தித்தபோது மழுப்பலாக பதில் கூறி வருகின்றனர். மூன்று முறை பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒருவர் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்
திருச்சியில் உள்ள கிறிஸ்தவ நல்லெண்ணம் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலை அறிந்து நமது கிறிஸ்தவர் சமுதாயத்திற்கு எந்த கெட்ட பெயரும் வரக்கூடாது எனக்கூறி சில நாட்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கி உள்ளனர்.
இவர்கள் யாரும் எந்த செய்தியும் வெளியிட மாட்டார்கள் எனவும் அந்த எம்எல்ஏ கல்லூரி நிர்வாகத்திற்கு உறுதி கூறியுள்ளார் என தகவல்.
மேலும் காவல்துறை விசாரணைக்கும் முட்டுக்கட்டையாக உள்ளாராம் எம்எல்ஏ.
இந்த செய்தியை வெளியிடும் பத்திரிகை களுக்கு விளம்பரங்கள் கொடுத்து வாயை அடைத்து விடலாம், சில நாட்களில் பொதுமக்கள் இதனை மறந்து விடுவார்கள் என கல்லூரி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனராம்.
மற்ற இந்து பள்ளி , கல்லூரிகளில் தாமாக வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை மற்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ( இந்த ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் திருச்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)( பாபா சிவசங்கரை தனிப்படை அமைத்து டெல்லி சென்று கைது செய்தவர்கள் ) கிறிஸ்தவ கல்லூரி என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் சந்தேகம்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர். ஆர்.ஜி.ஆனந்த் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.