Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

5 பவுனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி எப்போது ? அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி .

0

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான 5 சவரனுக்கும் மிகாமல் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள்குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

·இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில்:-

கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்குக் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் வருவதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

·மேலும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான 5 சவரனுக்கும் மிகாமல் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

·கடந்த ஆட்சியில், கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான நேர்காணல் முடிந்தவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்,

எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.