Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மா.செ. வெல்லமண்டி நடராஜன் அறிக்கை: அம்மா நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும்.

மா.செ. வெல்லமண்டி நடராஜன் அறிக்கை: அம்மா நினைவு நாளில் நலத்திட்டங்கள் வழங்க வேண்டும்.

0

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி ந.நடராஜன்
அவர்களின் செய்தி அறிக்கை.

நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி வருகின்ற 05-12-2020 சனிக் கிழமை காலை 10.00 மணி அளவில் திருச்சி மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் உள்ள அனைத்து வட்ட கழகத்திலும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம், அன்னதானம் ஏற்பாடு செய்து வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட கழக, பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி கலை பிரிவு Ex.கோட்டத் தலைவர்கள்,கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன், என சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.