Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கட்சி தொடங்க ரஜினி ரூ.40 கோடி சொத்து விற்பனை ?

கட்சி தொடங்க ரஜினி ரூ.40 கோடி சொத்து விற்பனை ?

0

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தற்போது வரை அவர் கட்சி துவங்கவில்லை.

தமிழகத்தில் கொரோனா பரவல் துவங்கிய உடனேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
அண்ணாத்தே படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
மேலும், தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு கடிதம் வெளியானது. இது ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால், அது தன்னுடைய கடிதம் இல்லை ஆனால், என்னுடைய உடல்நிலை குறித்து அதில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் உண்மையானது எனவும், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து விட்டு சரியான நேரத்தில் அரசியல் பற்றி அறிவிப்பேன் என ரஜினி விளக்கமளித்தார்.ஆனாலும், அவரின் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.

தொடந்து அவரை அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.
ஒருபக்கம், துக்ளக் குருமூர்த்தி அவரை சந்தித்து அரசியலுக்கு அவரை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல், வருகிற 20ம் தேதி சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா ரஜினியை சந்தித்து பேசவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரஜினி தனது ரூ.40 கோடி சொத்துக்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அந்த பணத்தை மூலதனமாக வைத்து மார்ச் மாதத்தில் ரஜினி கட்சியை துவங்கவுள்ளார் என சமூகவலைத்தளங்கள் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ, சில பண நெருக்கடிக்காகவே ரஜினி சொத்துக்களை விற்பதாக கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.