Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜல்லிகட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

ஜல்லிகட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

0

ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில், சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்க முயல்வது போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுவியுள்ளார். தனது சொந்த ஊரான விராலிமலையில் நிறுவி அதனை திறந்து வைக்க முதலமைச்சரை அழைத்து வந்து சொந்த ஊரில் மாஸ் காட்டியிருக்கிறார். கடந்த 2019-ல் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்தது. இதன் நினைவாக, காமராஜர் நகரில் உள்ள ரவுண்டானாவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிலை அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனத்தில் 100கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கோதுமை மாவு உற்பத்தி செய்யும் யூனிட்டை திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய முதலமைச்சர் 2020 ஆம் ஆண்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், நடப்பாண்டில் 820 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.