Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

0

திருச்சியில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திரண்ட விவசாயிகள் சங்கிலியால் தங்களை பிணைத்துக் கொண்டும், கழுத்தில் கயிறு மற்றும் மண்டை ஓட்டை மாட்டிக் கொண்டும் அரை நிர்வாணத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் போராட்டம் காரணமாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க செயலாளர் மேகராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

 

Leave A Reply

Your email address will not be published.