செக்கிழுத்த செம்மல் வ.உ,சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஓபிசி அணி பிரிவு தலைவர்அழகேசன்,துணைத் தலைவர் திலக்,மாநில இளைஞரணி செயலாளர் கௌதம் நாகராஜன்,மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா,
ஜெயகர்ணா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் தினகர்,,மணிகண்டன்,காளீஸ்வரன், பெல்ட் சீனி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

