அமமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
நந்தினி வி.சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமமுகவினர்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சிவபதி, அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வராசு, மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல். முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினவேல், மல்லிகா சின்னச்சாமி மற்றும்
ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.