Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி காப்பீடு தொகை விடுவிப்பு.திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி காப்பீடு தொகை விடுவிப்பு.திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த 23,893 விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், கடந்த 2020-21-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் நெல், மக்காச் சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக

நெல் பயிருக்கு11,305 விவசாயிகளுக்கு ரூ.19.05 கோடி,

மக்காச்சோளப் பயிருக்கு11,938 விவசாயிகளுக்கு ரூ.45.36 கோடி மற்றும்

பருத்தி பயிருக்கு 650 விவசாயிகளுக்கு ரூ.1.68 கோடி ஆக மொத்தம் 23,893 விவசாயிகளுக்கு ரூபாய் 66.09 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2021-22-ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்-II, பிர்கா அளவில் மக்காச்சோளம் -41 மற்றும் பருத்தி-11 பயிர்களில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

Suresh

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் இணைய, முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்களை அணுகலாம்.

இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.537/- மற்றும் பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.585.87/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மக்காச் சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.373.50/- செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும். எனவே, விவசாயிகள் அனைவரும் நடப்பு ஆண்டில் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறவேண்டும்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.