திருச்சி திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
திருச்சி திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை சார்பில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா. மரக்கன்று வழங்கல், நலத்திட்ட உதவிகள், விருது வழங்கும் விழா
U.K.R. புரோமோட்டர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
அனைத்திந்திய சித்த சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் பேராசிரியர் P.ரவிசேகர், U.K.R. புரோமோட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் S.S.ரஞ்சித் குமார், B.M.S. பவுண்டேஷன் நிறுவனர் பேராசிரியர் C.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜே.கே.சி.அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்றார்.
வழக்கறிஞர் ரமேஷ், திருச்சி வசந்தம் அரிமா சங்க தலைவர் D.G.R.வசந்தகுமார், பேராசிரியர் டாக்டர் A.சையத் ஜாகீர் அசன், ஆடிட்டர் B.வீரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
ஆடிட்டர் M.ரிச்சர்டு, M,ரவிசந்திரன். M.R.மதன் கமல், I.ஆனந்தராஜ். சந்தானகிருஷ்ணன், S.பொன்செல்வி, பிரிசில்லா ரெஜினா பேகம், அன்புராஜ் காலிக்பாய், பாலாஜி. ஜோசப் கண் மருத்துவமனை சிற்றாலய ஆயர் S.டேவிட் பரமானந்தம், திருவரங்கம் தமிழ் சங்க தலைவர் முனைவர் பால் ஜெயக்குமார், S.ராஜலிங்கம், N.M.சலாவுதீன்,
ஆசிரியர் M.அலெக்சாண்டர், போஸ்ட் மாஸ்டர் K.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் சகுந்தலா நன்றி கூறினார்.

