Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மகேந்திர சிங்தோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு.

மகேந்திர சிங்தோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு.

0

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டோனி இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க சம்மதித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட டோனி சம்பளம் வாங்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட மகேந்திரசிங் டோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.